பரஸ்பரநிதியில் பங்குசந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து கிடைக்கும் நீண்டகால முதலீட்டு லாபத்திற்கு நீண்டகால அடிப்படையிலான ஆதாயத்துக்கு வரி இல்லாமல்
இருந்தது . ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஆதாயத்துக்கு வரி இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலான லாபத்துக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக ஒருவர் ஓர்
ஆண்டுக்காலத்தில் 1.5 லட்சம் ரூபாய் லாபம் அடைந்தால், ஒரு லட்சம் ரூபாய் போக மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாய்க்கு 10 சதவிகிதம் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும் என்ற புதிய வரி 2018 பட்ஜெட்டில் மீண்டும் அறிமுகபடுத்த பட்டு இருக்கிறது .இதனால் 31 ஜனவரி 2018 க்கு முன் செய்த முதலீட்டாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.1 பிப்ரவரி 2018முதல் முதலீடு செய்யப்படும் முதலிடுகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பது முதலிட்டாளர்கள் மத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment