September 29, 2024

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது எப்படி? How to Invest in Mutual Fund?

                        மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது இப்போது மிகவும் எளிதாகவும் எளிமையாகவும் மாறிவிட்டது,  முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் தங்கள் KYC ஐ முதலில் முடிக்க வேண்டும், இது ஒரு முறை செயல்முறை ஆகும்.
 
                              KYC சரிபார்ப்பை முடிக்க உங்களுக்கு உதவ நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ஆக செயல்பட்டு உங்களுக்கு KYC சரிபார்பை செய்து தருகிறோம்.
 
                 நீங்கள் உங்கள் KYC ஐ முடித்தவுடன், ஒவ்வொரு முதலீட்டிற்கும் கூடுதல் சரிபார்ப்பை மேற்கொள்ளாமல் எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிதி திட்டங்களை முதலீடு செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம்.
                            மியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி சரி பார்ப்பிற்கு தேவையான ஆவணங்கள் பான் கார்டு ,ஆதார் கார்டு,ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போதுமானது. 
 
                    மேலும் இலவசமாக மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை துவக்குவதற்கு எங்களை தொடர்பு கொள்ளலாம் நாங்கள்  அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் எஸ் தில்லை மகேந்திரன் #9840044721.
 

                    Following Documents For New Mutual Fund Account

                    PAN Card

                    Aadahr Card

                    Passport Size Photo 1

                    Bank Detail (With Name Printed Cheque)


மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி? How to create free Mutual Fund account?

                  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு வங்கி கணக்கு, பான் கார்ட், ஆதார் கார்ட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இவை நான்கும் இருந்தால் மிக எளிதாக கணக்கை துவக்கி விடலாம்.

                மேற்கண்ட ஆவணங்களை வைத்து கேஒய்சி  அப்ளிகேஷனை மியூச்சுவல் ஃபண்ட் அப்ளிகேஷனும் சேர்த்து எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் கொடுத்து உங்கள் கணக்கை எளிதாக துவக்கி கொடுப்போம .

                அதாவது நீங்கள் முதல் முதலில் முதலீடு செய்பவராக இருந்தால் எங்களுடன் இலவச ஆலோசனை பெற்று உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு முதலீடு செய்ய தொடங்கலாம்

                . எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவராக இருந்தால் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கலாம் ஒரே தடவையாக முதலீடு செய்பவராக இருந்தால் 500 ரூபாயிலிருந்து  கணக்கு துவங்கலாம். இப்பொழுது டிஜிட்டல் இந்தியாவில் எந்தவித அப்ளிகேஷனும் நிரப்பாமல் ஆன்லைன் மூலமாக நாம் கணக்கை துவக்கி கொள்ள முடியும் .அதற்கு நாங்கள் அனுப்பும் கே ஒய் சி யை லிங்கை கிளிக் செய்து மேலே குறிப்பிட்ட ஆவணங்களையும் நீங்களே அப்லோட் செய்வதன் மூலமாக கே ஒய் சி ஆக்டிவேட் செய்ய முடியும்.

                 கே ஒய் சி ஆக்டிவேட் செய்த பிறகு நாம் மியூச்சுவல் பண்ட்  எந்த திட்டமாக இருந்தாலும் முதலீடு செய்ய முடியும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு தேவை இல்லை.

#9840044721 #mutualfundstamil #kyc #SIPTAMIL #freedemataccount #licipo #SBIMF

நோயில்லாமல் வாழ ஆறு எளிய வழிகள்

நோயில்லாமல்வாழஆறுவழிகள்..!!

1 - பசி
2 - தாகம்
3 - உடல் உழைப்பு
4 - தூக்கம்
5 - ஓய்வு
6 - மன அமைதி- 

பசி..

உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா?? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்?

யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்?

உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும். இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தாகம்..

அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.

தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.

உடல்உழைப்பு..

ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

இதற்கு நீங்கள் முன்னோர்கள் அருளிய யோக பயிற்சிகளை செய்யுங்கள், வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்யுங்கள்.

உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.

தூக்கம்..

யாருக்கு தூக்கம் வரும்.? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு மட்டும் வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.

ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.

இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.

நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.

இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.

நீங்கள் இரவு 9மணிக்கு உறக்கச்சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.

ஓய்வு..

சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருத்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.

மனநிம்மதி

ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.

மனம் நிம்மதியாக இருக்க விருப்பத்துடன் வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.
நான் பார்க்கும் யாவரும், என்னை பார்க்கும் யாவரும் அனைத்து நலமும் வளமும் பெற வேண்டும் என்ற உணர்வெடுங்கள், எனது என்னம்,சொல்,செயல் அனைத்தும் புனிதம் பெறவேண்டும் என்று நினையுங்கள் .உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்கு சென்று இறைவனை பாடி வேண்டி வழிபடுங்கள்.அப்படி கோவிலுக்கு சென்று வழிபட வாய்ப்பு இல்லை எனில் வீட்டிலே சிறிது நேரம் விளக்கேற்றி வழிபடுங்கள்.

மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கியத்தை  அடைந்துவிட்டீர்கள்.

உடலில் ஒர் இல்லாத ஒன்று  இருக்கிறது அது சீர் பெற்றால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும் அது சீர் கெட்டால் உடல் முழுவதும் சீர் கெட்டு விடும் அது தான் மனம்.

உழைப்பே இதற்கு மூலாதாரம், ஆயினும் உழைக்கும் எண்ணம் இன்று அடியோடு குறைந்துபோனதுதான் நோயின் நுழைவாயில் என்பதை மறுப்பதற்கில்லை..

நலம் பெறுவோம் வளம் பெறுவோம்.இதையும் மீறி நமக்கு எதிர் பாரத நோய் ஏற்பட்டால் வரும் மருத்துவ  செலவை சமாளிக்க ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை நோய் வரும் முன்னரே எடுத்து நமது பொருளாதார இழப்பை சமாளிக்கலாம்.இன்சூரன்ஸ் பாலிசி எடுபதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும். 98400 44721.