மியூச்சுவல் ஃபண்ட், லைஃப் இன்சூரன்ஸ்,ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் நிதி சார்ந்த அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.மேலும் எங்கள் மூலமாக முதலீடு செய்வதற்கும் எங்களை தொடர்பு கொள்ளலாம். Chennai,Tamil Nadu,India +91 98400 44721
அக்டோபர் 27, 2018
அக்டோபர் 23, 2018
How to invest in mutual funds?மியூச்சுவல் பண்ட்ல் எப்படி முதலீடு செய்வது ?
Angel BEE என்ற ஆப்பை உங்கள் மொபைலில் கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கை மூலமாக டவுன்லோட் செய்து நீங்கள் முதலீடு செய்யலாம் .மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் 9840044721
Get your wealth creation journey started by
downloading Angel BEE app and get invest ready in 2 mins! Here's the NEW
WAY TO GET RICH!
Get App at http://mf.angelbee.in/MF/LinkRequest/VFRUSEk=-QkVFTlhU-VFRUSEk=
அக்டோபர் 13, 2018
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி... (SIP) தொடர்ச்சியான முதலீடு... உறுதியான லாபம்!
இந்த
உலகின்
மிக வயதான
மனிதர், இஸ்ரேல்
க்ரிஸ்டல் (Yisrael Kristal).
சமீபத்தில் இவர்
தனது 113-வது
வயதில் இஸ்ரேலில்
இறந்து போனார். இந்தச்
செய்தியைக்
கேள்விப்பட்டதும் மியூச்சுவல்
ஃபண்ட்
பிசினஸில் இருக்கும்
எனக்குள்
எழுந்த எண்ணம்,
நூறு ஆண்டுகள்
அல்லது அதற்கும்மேல்
நான்
உயிரோடு இருந்தால்
நான் என்னுடைய
நிதி நிலையை
எப்படிச் சமாளிப்பேன்
என்பதுதான்.
இது, நிச்சயம்
சவாலான ஒன்று.மனிதர்களாகிய
நம்முடைய
சராசரி வாழ்நாளானது
மருத்துவ அறிவியலின்
வளர்ச்சியாலும்,
தொழில்நுட்பத்தாலும் அதிகரித்துவிட்டது.
உலக
வங்கியின் அறிக்கையின்படி, 1960-ல் 52
வருடங்களாக
இருந்த மனிதனின்
சராசரி வாழ்நாள் 2015-ல் 72
வருடமாக
உயர்ந்திருக்கிறது. ஆனால்,
நம்முடைய
வாழ்நாள் உயர்ந்த
அளவுக்கு, அந்த
வாழ்நாளை மகிழ்ச்சியாகக்
கழிக்கும்
அளவுக்குத் தேவையான
செல்வம் அல்லது
பணத்தை உருவாக்கிக்கொள்ளும்
முயற்சி
என்பது நமக்குப்
போதாமல் இருக்கிறது.
இந்தச்
சவாலை
எதிர்கொள்ளவே, நாம்
நம்முடைய சேமிக்கும்
பழக்கத்தில்
பெரிய மாற்றத்தைக்
கொண்டுவர வேண்டியிருக்கிறது.
நம்
நாட்டில் சேமிப்பு
என்பது பாரம்பர்ய
மற்றும் உறுதியான
வருமானம் தரும்
திட்டங்களில்தான் பெரும்பாலும்
முதலீடு
செய்யப்பட்டு வருகிறது.
இவற்றில்
செய்யப்படும் முதலீடானது
நம்முடைய
வாழ்க்கைக்குத் தேவையான
அளவு
செல்வத்தைப் பெருக்குவதில்லை.
காரணம்,
இந்தத் திட்டங்கள்
மூலம் கிடைக்கும்
வட்டி வருமானம்
தொடர்ந்து குறைந்துவருகிறது.
இந்தப்
பிரச்னைக்கு
ஒரே தீர்வு,
நம்முடைய முதலீடுகளை
ஒரே
தொகுப்பாக வைத்திருக்காமல்
நமது
இலக்குகளுக்கேற்ப பிரித்து
முதலீடு
செய்வதே. அதாவது,
பங்குச் சந்தையோடு
ஒன்றிணைந்த முதலீட்டுத்
திட்டங்களான
மியூச்சுவல் ஃபண்ட்
திட்டங்கள் நம்முடைய
போர்ட்ஃபோலியோவில்
கட்டாயம் இருக்க
வேண்டும். ரெக்கரிங்
டெபாசிட்
திட்டம் போலவே,
மியூச்சுவல் ஃபண்டில்
மாதாமாதம்
ஒரு தொகையை
முதலீடு செய்யும்
திட்டம் உள்ளது.
அதுதான் எஸ்ஐபி(Systematic Investments Plan).
இதில் மாதம்
ரூ.500 முதல்
முதலீடு செய்ய
முடியும். தவணை
முதலீடு என்பதற்கு
மாறாக, நல்ல
முதலீட்டுத் திட்டமாக
எஸ்.ஐ.பி(SIP)
முதலீடு
இருக்கிறது.
மியூச்சுவல்
ஃபண்ட்
எஸ்.ஐ.பி(SIP)
முதலீட்டைப்
புரிந்துகொள்ள ஓர்
உதாரணத்துடன் அணுகலாம்.
நாம்
எஸ்.ஐ.பி
முறையில்
ரூ.500 முதல்
முதலீடு செய்யலாம்
என்று ஏற்கெனவே
சொன்னோம். என்றாலும்,
அந்த
முதலீட்டின் மகத்துவத்தை
அறிந்துகொள்ள
மாதமொன்றுக்கு ரூ.10,000-த்தை
எஸ்.ஐ.பி
மூலம்
ஈக்விட்டி சார்ந்த
ஃபண்டுகளில் முதலீடு
செய்வதாக
வைத்துக்கொள்வோம். இதில்
கிடைக்கும்
லாபமானது கூட்டு
வட்டி வளர்ச்சி
அடிப்படையில் 12% என
எடுத்துக்கொண்டால்,
அடுத்த 20 வருடங்களில்
அந்த
முதலீடு ஒரு
கோடி ரூபாயாக
வளர்ந்திருக்கும், 30 வருடங்களில்
ரூ.3.5
கோடியாக மாறும். எஸ்.ஐ.பி
முதலீட்டில்
கூடுதலாக ஒரு
அம்சம் உள்ளது.
அது ‘ஸ்டெப்
அப் எஸ்.ஐ.பி
அல்லது
டாப் அப்
எஸ்.ஐ.பி’
என்பது.
அதாவது, நிலையான
எஸ்.ஐ.பி
திட்டத்தில்
தொடர்ந்து ஒவ்வொரு
மாதமும் ஒரே
தொகையை முதலீடு
செய்வதற்குப் பதிலாக
நம்முடைய
வருமான வளர்ச்சிக்கேற்ப,
நமக்கு
வேண்டிய சமயத்தில்,
நம்முடைய எஸ்.ஐ.பி
முதலீட்டுத்
தொகையை நாம்
ஒவ்வொரு வருடமும்
அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
அதன்
அடிப்படையில் ஒவ்வொரு
வருடமும்
உங்களுடைய முதலீட்டுத்
தொகையான
ரூ.10 ஆயிரத்தில் 10%
அளவுக்கு
உயர்த்தி முதலீடு
செய்தால், அதே 12
சதவிகிதக் கூட்டு
வட்டி வருமான
அடிப்படையில் 20 ஆண்டுகளில்
உங்களுடைய
முதலீடு ரூ.1.58
கோடி ஆகவும், 30
ஆண்டுகளில் ரூ.6
கோடியாகவும் வளர்ச்சி
யடையும்.
இதுதான் கூட்டு
வட்டி வளர்ச்சி
என்னும் அதிசயம்.
முதலீட்டாளர்களின்
முதலீடுகள்,
நல்ல வருமான
வளர்ச்சியை அடைய
உதவும் வகையில்
மியூச்சுவல் ஃபண்ட்
துறையில் ‘பெர்பீச்சுவல்
எஸ்.ஐ.பி’ (Perpetual SIP)
என்னும்
நிரந்தர எஸ்.ஐ.பி
அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளது. இது,
நீண்ட கால
அடிப்படையில் தொடர்ந்து
தவறாமல்
முதலீடு செய்பவர்களை
உருவாக்குகிறது.
இன்றைக்கு
நாம்
செய்யும் பெரும்
பாலான முதலீடுகள்
செல்வத்தைப் பெருக்கும்
வாய்ப்புகளை
இழக்கக் காரணம்,
நாம் நம்முடைய
முதலீடுகளை நீண்ட
காலத்துக்குக் கூட்டு
வட்டி
அடிப்படையில் வளர்ச்சியடைய
அனுமதிக்காமல்
இருப்பதினால்தான். சரியான
தவணைத்
தேதியில் நாம்
நமது எஸ்.ஐ.பி
திட்டத்தைப்
புதுப்பிக்கத் தவறிவிடுவதே
இதற்கு
முக்கியக் காரணம்.
இதற்காகத்தான் ‘நிரந்தர
எஸ்.ஐ.பி’
என்கிற
முறை அறிமுகப்
படுத்தப்பட்டிருக்கிறது. நீண்ட
காலத்துக்குத்
தொடர்ந்து ஒழுங்காக
முதலீடு செய்ய
இந்த முறை
நமக்கு உதவுகிறது.
இந்த
நிரந்தர
எஸ்.ஐ.பி-யைத்
தொடங்கிபின்னர்
அதன் முதலீட்டுத்
தொகையை மாற்றவோ,
பணத் தேவைக்
காரணமாக தற்காலிகமாக
எஸ்.ஐ.பி
தவணையை
நிறுத்தி வைக்கவோ
அல்லது உங்களுடைய
முதலீட்டின் அலோகேஷனை
மாற்ற
நினைத்தாலோ என்ன
செய்வது என்று
நீங்கள் நினைக்கலாம்.
இவற்றில்
எந்தச் சிக்கல்களும்
இல்லை.
ஏனெனில், பெரும்பாலான
மியூச்சுவல்
ஃபண்டுகள் நம்மை
நீண்ட காலத்துக்கு
முதலீடு செய்ய
வைப்பதற்காகப் பல்வேறு
நெகிழ்வான
அம்சங்களை வைத்துள்ளன.
அவசரத்
தேவைகள் காரணமாக
உங்களுடைய மாதாந்திர
எஸ்.ஐ.பி
தவணையை
ஒன்று அல்லது
இரண்டு மாதங்களுக்குச்
செலுத்தத்
தவற நேர்ந்தால்,
சில ஃபண்டுகளில்
எஸ்.ஐ.பி
தவணையைத்
தற்காலிகமாக நிறுத்தி
வைக்கும்
வசதி உள்ளது.
மீண்டும் உங்களால்
முதலீடு செய்ய
முடியும்போது தொடர்ந்து
எஸ்.ஐ.பி
தவணைகளைச்
செலுத்தலாம். அதேபோல்,
உங்களுடைய
எஸ்.ஐ.பி
தொகையைக்
குறைக்கவும், அதிகரிக்கவும்
முடியும்.
சம்பள உயர்வு
வந்தாலோ, போனஸ்
கிடைத்தாலோ அந்தத்
தொகையை அதில்
முதலீடு செய்யலாம்.
அதேபோல், வேலையிலிருந்து
மாறினால்
சம்பளத் தேதி
மாறுகிறது என்றால்
எஸ்.ஐ.பி
தவணையைச்
செலுத்தும் தேதியை
மாற்றுவதென்றாலும் மாற்றலாம்.
அதற்காகப்
புதிதாக ஒரு
எஸ்.ஐ.பி
கணக்கைத்
தொடங்க தேவையில்லை.
ஆனால், நிரந்தர
எஸ்.ஐ.பி
திட்டத்தை
ஆரம்பிக்கும்முன், உங்கள்
முதலீட்டு
ஆலோசகரிடம் இந்த
வசதிகளெல்லாம் குறிப்பிட்ட
மியூச்சுவல்
ஃபண்ட் நிறுவனத்தில்
அல்லது
ஃபண்டில் இருக்கின்றனவா
என்பதைப்
பற்றிக் கேட்டு
உறுதி செய்துகொள்ளவும்.
நிரந்தர
எஸ்.ஐ.பி.யின்
முக்கிய
நோக்கம், சில
தனிப்பட்ட காரணங்களால்
நம்முடைய
நீண்ட கால
முதலீடு பாதியிலேயே
நின்று விடக்கூடாது
என்பதற்காகத்தான். எனவே,
அவசியமில்லாமல்
இந்த வசதிகளைப்
பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
அப்போதுதான்
நாம் நம்முடைய
முதலீட்டின் கூட்டு
வளர்ச்சியின் பலன்களை
அனுபவிக்க
முடியும். நிரந்தர
எஸ்.ஐ.பி
முறைகள்
உங்களுடைய விருப்பத்துக்கேற்ப
முதலீடு
செய்து, உங்களுடைய
செல்வத்தைப் பெருக்கும்
பாதையை
நீங்கள் வகுத்துக்கொள்ளும்
வகையில்
உங்களுடைய முதலீட்டுக்கான
சுதந்திரத்தை
முழுமையாக உங்களுக்கு
அளிக்கிறது.
உடனடியாகத்
தொடங்கி,
நீண்ட காலம்
முதலீடு செய்வதுதான்
செல்வத்தைப்
பெருக்குவதில் உள்ள
முக்கியமான அம்சம்.
தாமதமாக ஆரம்பிப்பவர்கள்,
இலக்கை
அடைய அதிகமாக
முதலீடு செய்ய
வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு,
மாதமொன்றுக்கு
ரூ.10 ஆயிரத்தை 30
ஆண்டுகளுக்கு முதலீடு
செய்து,
ஆண்டுக்குச் சராசரியாக 12%
வருமான
வளர்ச்சி அடைந்தால்,
ரூ.3.53
கோடியாகக் கிடைக்கிறது.
ஆனால்,
இதே தொகை 10
ஆண்டுகளில் உங்களுக்குத்
தேவை
எனில், நீங்கள்
மாதம் ரூ. 1.5
லட்சத்தை முதலீடு
செய்ய வேண்டும்.
ரூ.10 ஆயிரத்தைக்
காட்டிலும், இது 15
மடங்கு அதிகமாகும்.
நீங்கள்
முக்கியமாகப்
புரிந்துகொள்ள வேண்டியது
இதுதான்.
ஒரு மரத்தை 20
ஆண்டுகளுக்குமுன் நட்டிருந்தால்
இன்றைக்குப்
பலன் தரும்;
இன்றைக்கு நட்டால்
இருபது ஆண்டுகளுக்குப்
பிறகு
பலன் தரும்.
இதுவரை மரத்தை
நீங்கள் நடவில்லை
எனில், இன்றே
நடுங்கள். கூட்டு
வட்டி வருமான
வளர்ச்சியின் அதிசயத்தினால்,
அடுத்த
இருபது ஆண்டுகளில்
அது பூத்துக்
குலுங்கும் மரமாக
வளர்ந்துவிடும். இதற்கு
நீங்கள்
கடைப்பிடிக்க வேண்டியது,
தொடர்ச்சியான
முதலீட்டு ஒழுக்கமும்
பொறுமையும்தான்.
பத்மஸ்ரீ
விருது
பெற்ற அஸ்ஸாம்
மாநிலத்தைச் சேர்ந்த
தனி
மனிதனான ஜாதவ்
பயேங், 1979-ல்
புல் பூண்டுகூட
முளைக்காத பாலை
வனத்தில் மரத்தை
நட ஆரம்பித்தார். 30
வருடங்களில்
அவர் பல
நூறு ஏக்கரில்
ஒரு பெரிய
காட்டையே உருவாக்கிவிட்டார்.
அந்த
அழகிய காட்டில்
இப்போது யானைகளும்,
மான்களும் வாழ்கின்றன.
ஜாதவ்
பயேங் செய்த
சிறு காரியம்
இன்று பெரும்
காடாய் வளர்ந்து
நிற்கிறது. உங்களுடைய
நிரந்தர
எஸ்.ஐ.பி
முதலீடு
அப்படிப்பட்ட வளர்ச்சியை
உங்களுக்குத்
தரும்!
தொகுப்பு:
ஜெ.சரவணன்
Source :- Nanayam Vikatan
அக்டோபர் 11, 2018
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது எப்படி?
இதுஎனது
பதிவு
அல்ல.நாணய
விகடன் பதிவு.
மிக விளக்கமான
பதிவு.
இந்திய
ரூபாயின்
மதிப்பு சரிவது
எப்படி.. அமெரிக்க
டாலருக்கும் ஏன்
இந்த வித்தியாசம்...?
ரூபாய் (அல்லது
எந்த
கரன்சியாயினும்) நோட்டுக்களை
அச்சடித்து
புழங்கவிடுவதை, IMF எனும்
சர்வதேச
நாணய நிதியம்,
கண்கொத்திப் பாம்பாக
கவனித்துக் கொண்டே
இருக்கும்.! எந்த
ஒரு நாட்டின்
அரசும் சும்மா
இஷ்டம் போல
நோட்டுக்களை அடித்து
புழக்கத்தில் விட
முடியாது! அதற்கு
இந்த IMF ஒப்புதல்
தரவேண்டும்.!
ஆனால்,
எந்த
மதிப்புக் கரன்ஸியை
வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000….
என !) அடிக்கலாம்...
என்ன,... அடித்து
புழக்கத்தில் இருக்கும்
நோட்டுக்களுக்கு
சமமான மதிப்பில் (எடையில்)
தங்கம்
கையிருப்பு அரசிடம்
இருக்க வேண்டும்.
சரி.
இப்பொழுது, நம்
நாட்டோடு இன்னொரு
நாட்டை ஒப்பிடலாம் -
அமெரிக்காவையும் இந்தியாவையும்!
அமெரிக்காவைத்
தேர்ந்தெடுத்ததற்குக் காரணம்,...
நாம்
எப்பொழுதுமே அமெரிக்காவையே
உதாரணமாகக்
கொண்டு பழகியுள்ளோம்!
கணக்கிடுவதற்காக,
சில
கற்பனை உதாரண
மதிப்புக்களை / எண்களை
எடுத்துக்கொள்வோம்:
துவக்கத்தில்,
அமெரிக்காவிடமும்
இந்தியாவிடமும் சமமாக, 1
கிலோ (1000
கிராம்) தங்கம்,
கையிருப்புள்ளதாக வைத்துக்
கொள்வோம்.
இப்பொழுது:
அமெரிக்கா,
மொத்தம்
ஆயிரம் டாலர்
மதிப்புக்கு, 1 டாலர்
நோட்டுக்கள் 1000
அச்சடிக்கிறது என்று
வைத்துக்கொள்வோம். அதாவது (தங்கம்
இருப்பைக்
கணக்கில் கொண்டால்), 1
கிராம்
தங்கம் 1 டாலருக்கு
சமம்! சரியா!
இந்தியாவும்,
அதே
போல், ஆயிரம்
ரூபாய் மதிப்புக்கு
இணையாக 1000 ஒரு
ரூபாய் நோட்டுக்களை
அச்சடிக்கிறது.! அதாவது
ஒரு
கிராம் தங்கத்துக்கு,
ஒரு
ரூபாய் மதிப்பு!
இப்பொழுது
பார்த்தீர்களானால்,
ஒரு அமெரிக்க
டாலரும் கூட,
ஒரு இந்திய
ரூபாய்க்கு சரி
நிகர் மதிப்பே!
ஒரு அமெரிக்க
டாலர் = ஒரு
இந்திய ரூபாய்
மட்டுமே! இப்பொழுது,
அமெரிக்க
அரசாங்கம்
ஆயிரம் ஒரு
டாலர் நோட்டுக்களை
புழக்கத்தில் இறக்கி,
அதிலிருந்து,
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20
சதவீதம்
வரியாக இலக்கு
வைக்கிறது. அதன்
மூலமாக, 200 டாலர்கள்
வரியாக
திரும்பப் பெறுகிறது.
இந்த 200
டாலர்களை
வைத்து, இன்னமும்
ஒரு 200 கிராம்கள்
தங்கத்தை வாங்கி,
அதற்கு இணையாக
இன்னமும் ஒரு 200
ஒரு டாலர்
நோட்டுக்களை அச்சடித்து,
புழக்கத்தில்
விடுகிறது! ஆக
மொத்தம், தற்போது,
அமெரிக்க அரசாங்கத்திடம் 1200
கிராம்
தங்கமும், அமெரிக்க
சந்தையில் அந்தத்
தங்கத்துக்கு இணையாக 1200
டாலர்
நோட்டுக்களும் புழக்கத்தில்
உள்ளன!
ஆயினும், ஒரு
கிராம் தங்கம் =
ஒரு டாலர்
மட்டுமே!
இந்த
பொருளாதாரம், இதே
போன்று விரிவடைந்து,
மேலும் தங்கம்-மேலும்
டாலர்
நோட்டுக்கள், என,
எவ்வளவு வளரும்
பொழுதும், ஒரு
கிராம் தங்கம்
ஒரு டாலருக்கு
நிகராகவே இருக்கும் -
இலக்கு
வைத்த வரிவிகிதம்
முழுமையாக வசூலாகும்வரை!.
இப்பொழுது,
இந்தியாவுக்கு
வருவோம்.!
இந்திய
அரசும்
அமெரிக்கா போலவே 2000
ரூபாய்
நோட்டுக்களை அச்சடித்து
புழக்கத்தில்
விட்டு, அதிலிருந்து 20%
வரியாக
வசூலாக இலக்கு
வைக்கும். ஆனால்,
அசல் வரிவசூலோ,..
வெறும் 50 ரூபாய்கள்
மட்டுமே (என்று
வைத்துக்கொள்வோம்!).!! அதாவது,
புழக்கத்தில்
விட்ட 2000 ரூபாய்களில்,
வெறும் 250
ரூபாய்கள் மட்டுமே
அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை
செய்யப்பட்டது!மிச்சம் 750 ரூபாய்கள்,
வரி
செலுத்த விருப்பம்
இல்லாதவர்களால், கணக்கில்
வராமல்
புழங்கத் தொடங்கி
விட்டது! இதுதான்
கருப்புப்பணம்.!
இந்த 750
ரூபாய்கள்,
சந்தையில் புழக்கத்தில்
இருந்தாலும்
கூட, இது
அரசின் வரவு
செலவுக் கணக்குகளில்
பதிவாவதில்லை.! ஆக,
அரசுக் கணக்குப்படி,
நாட்டில் புழக்கத்தில்
வெறும் 250
ரூபாய்கள் மட்டுமே
இருப்பதாக கணக்கில்
கொள்ளப்படும் (சந்தையில்
மிச்சம் 750
ரூபாய்கள் நிஜத்தில்
இருந்தாலும் கூட!).!
இந்த கணக்கில்
வராத 750 ரூபாய்கள்
மூலம் நடக்கும்
பரிவர்த்தனைதான், அரசின்
கட்டுப்பாட்டில்
இல்லாத, இணைப்
பொருளாதாரம் என்பது!
சரி.
இப்பொழுது, அரசு,
தனக்கு கிடைத்த
வரிப்பணம் 50 ரூபாய்களை
வைத்து,
மேலும் ஒரு 50
கிராம் தங்கம்
மட்டுமே வாங்கி
கையிருப்பை உயர்த்த
முடியும்! தவிர,
அதற்கு இணையாக
இன்னமும் ஒரு 50
ஒரு ரூபாய்
நோட்டுக்களை மட்டும்
அச்சடித்து வெளிவிட
முடியும்! இப்பொழுது
சந்தையில் (அதிகாரபூர்வமாக)
உள்ள
இந்திய ரூபாய்கள்
வெறும் 300 ரூபாய்கள்
மட்டுமே! (ரூ.250 +
ரூ.50).
ஆனால், அசலாக
அரசு அச்சடித்து
வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து,
மொத்தம் 1050
ரூபாய்கள் கணக்கில்
இருந்திருக்க வேண்டும்!
எது
எப்படி இருந்தாலும்,
அரசு, மேலும்
நோட்டுக்களை அச்சடித்து
சந்தையில்
வெளியிட்டே ஆகவேண்டும் -
காரணம்,
ஏற்கெனவே வெளியிட்ட 750
ரூபாய்கள்
அதிகாரபூர்வமாக கணக்கில்
வராமல் "காணாமல்
போய்விட்டதல்லவா"?
எனவே, அரசு
அந்த விடுபட்ட 750
ரூபாய்களை அச்சடித்து
வெளிவிட
முடிவெடுக்கிறது!
இப்பொழுது
வருகிறார்
கண்கொத்திப்பாம்பு IMF ! "நீங்க
அதுமாதிரி
எல்லாம் இஷ்டத்துக்கு
அச்சடிக்க
முடியாது.! உங்க
தங்கம் கையிருப்புக்கு
இணையாகத்தான்
நோட்டுக்கள் வெளிவிடமுடியும்!"
என்கிறார்
அவர்! ஆனால்,
இந்திய அரசோ,
நோட்டு அச்சடித்தே
தீரவேண்டும் என்று
ஆடம் பிடிக்கும்
பொழுது, IMF சொல்லும்: "உன்
ரூபாயின்
மதிப்பை, நிகராக
நீயே குறைத்துவிட்டு,
மேலும்
நோட்டுக்களை அச்சடித்துக்கொள்!",
என்று!
அரசுக்கு வேறு
வழி கிடையாது!
காரணம், அது,
வெளியிட்ட நோட்டுக்களுக்கு,
இலக்கு
வைத்த வரி 100%
வசூலாகவில்லை! அதனால்,
மேலும் (அமெரிக்கா
போல)
தங்கம் வாங்கி
கையிருப்பை உயர்த்த
முடியவில்லை! அதனால்,
கணக்குப்
போட்டு, ரூபாயின்
மதிப்பை தானே
குறைத்து அறிவித்துவிட்டு,
மேலும் 750
ரூபாய் நோட்டுக்களை
அச்சடித்து புழக்கத்தில்
விடுகிறது,
இந்திய அரசு!
இப்பொழுது, மொத்தம் 1800
ரூபாய்கள்
அச்சடித்து புழக்கத்தில்
உள்ளது 1000 + 50 + 750) -
ஆனால், அரசின்
வசம், வெறும் 1050
கிராம் தங்கம்
மட்டுமே கையிருப்பு
உள்ளது!
ஆக,..
இப்பொழுது, இந்திய
ரூபாயின் மதிப்பு,
ரூ.1 இல்
இருந்து, ரூ.1.71
என ஆகி
விட்டது! (1800 ஐ 1050ஆல்
வகுத்தால் = 1.71)
அதாவது,
மேற்சொன்ன
அமெரிக்க டாலரை
ஒப்பிடும் பொழுது, 1
டாலருக்கு சமமாக
இருந்த இந்திய
ரூபாய், இப்பொழுது
ரூ.1.71 என
வீழ்ச்சி அடைந்துவிட்டது!
$1 = Rs.1.71 !
இதேபோல்,
நோட்டுக்களை,
சந்தைத் தேவைக்கு
ஏற்றாற்போல் அடித்து
வெளிவிட
வெளிவிட, ரூபாயின்
மதிப்பு ஒவ்வொரு
முறையும் குறைந்துகொண்டே
வருகிறது!
ஆனால், கையிருப்பு
தங்கம் மட்டும்,
வெளிவந்த நோட்டுக்களுக்கு
சமமாக
கூடுவதே இல்லை!
இதனால்தான், ...
இன்று,
ஒரு அமெரிக்க
டாலர் = Rs. 67.80 என
வந்து
நிற்கிறது!
இந்திய
அரசும் 100 %
இலக்கு வைத்த
வரிகளை வசூலித்திருக்குமானால்,
நம்
இந்திய ரூபாயின்
மதிப்பு இவ்வளவு
கேவலமாக சரிந்திருக்கவே
சரிந்திருக்காது!
இப்பொழுது,
உங்களுக்கு
வரிகளின் முக்கியத்துவமும்,
பொதுமக்களுக்கு
அதனால் (மறைமுகமாக)
கிடைக்கும் பலன்களும்
ஓரளவு
புரிந்திருக்கும் என
நினைக்கிறேன்! நிலையான
வலுவான
ரூபாயில், வீடு,
நிலம், பொருட்களின்
விலை மிகவும்
குறைவாகவே இருக்கும்!
இந்த
ஒற்றைக் காரணத்தால்,
அமெரிக்கா, உலகின்
மிகப் பணக்கார
நாடாக அறியப்படுகிறது!
காரணம்,
அங்கு கிட்டத்தட்ட 95%
குடிமக்கள்
வரி செலுத்துகின்றனர்!
ஆனால்,
இந்தியாவில்?
யாராலாவது, ஊகிக்க
முடியுமா?
percentage of taxpayers in India
என்று கூகிள்
செய்து தேடிப்பாருங்கள்!
நல்ல
இந்தியக் குடிமகன்
தலையை வெட்கத்தில்
தொங்கவிட்டுக் கொள்வான்!
ஆம்.!
வெறும் 1% க்கும்
குறைவானவர்களே இந்தியாவில்
வரி
செலுத்துபவர்கள்!
நாம்,
நம் நாட்டில்
அமெரிக்காவுக்கு இணையான
சமூகப்
பாதுகாப்பு, கட்டமைப்பு
வசதிகள்,
சுத்தம், சுகாதாரம்,
வெட்டில்லாத மின்சாரம்,
பகல்போல
ஒளிமயமான இரவு,
உயர்தர வாழ்க்கை
என எல்லாவற்றையும்
எதிர்பார்க்கிறோம்! அங்கு
இருக்கும்
அவற்றை சிலாகித்து
புகழ்ந்து பெருமூச்சு
விடுகிறோம்.
ஆனால்,...
அவர்கள்
போல,
ஒட்டுமொத்த சமூகமாக
வரி செலுத்துகிறோமா?
கள்ள/கறுப்புப்
பணத்தை புறம்
தள்ளுகிறோமா? நாடு
முன்னேற, நம்மாலான
பங்களிப்பை, வரிகள்
வாயிலாக செய்கிறோமா?
என்று யோசித்தால்,...
கசப்பான
விடை, "இல்லை"
என்பதே ஆகும்!
இந்த
ஆய்வுக் கட்டுரையை
படிக்கும்
உங்களுக்கு,
கறுப்புப் பணம்,
எப்படி உருவாகி,
ஒரு நாட்டின்
பொருளாதாரத்தை மிக
மோசமாக பாதிக்கும்,
என்று எடுத்துக்
காட்டவே...
Special Thanks to :
நாணயம்விகடன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)